தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் கரூர் மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்த பயணம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் உணர்ச்சி ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு அவர் கரூருக்கு திரும்பிச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.ஜூலை 10ஆம் தேதி கரூருக்கு செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு அரசு சார்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், மக்களுடன் நேரடியாக சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் உதவிகளையும் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் இதர நிவாரண உதவிகளை வழங்குவது இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறை உயர் அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருகின்றனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீட்டு மனு தாக்கல் செய்ததுடன் குற்றம் சாட்டப்பட்டவர் என்று முதல்வர் விஜயை சுட்டிக்காட்டியது. அப்போது முதல் தகவல் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய்யை குற்றவாளி என்பதாய் எனவும் நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்த நிலையில் திமுக தனது மனுவை வாபஸ் பெற்றது.
இதையும் படிங்க: நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??
இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதால் திமுகவிற்கு என்ன பயம் என்று அமைச்சர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார் எஃப் ஐ ஆர் ஐ படிக்காமல் உச்சநீதிமன்றம் சென்றதாக திமுகவை சாடினார். தமிழக அரசு மக்களுக்காக நன்மைகளை செய்து வருவதாகவும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் இருப்பதாக தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து செய்த சதி முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாத்திரையை கூட போதை பொருள் மாதிரிதான் பயன்படுத்துவாரா..? சிக்கிய அமைச்சர்... நயினார் தாக்கு.!