2026-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில், வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, சில இடங்களில் 108 ஃபாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் அடிக்கடி வெப்ப அலை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வெயில் வெறும் தொல்லை மட்டுமல்ல. அது பொது சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை போன்ற பகுதிகள் வெப்பத்தின் மையங்களாக மாறியுள்ளன. தற்போது கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை பெருமளவு பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டு இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!
வானிலை மையத்தின் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகு பள்ளி திறப்பு தேதி குறித்து அறிவிப்போம் எனவும் கூறியுள்ளார். பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார். காலை உணவு மற்றும் மதிய உணவு உள்ளிட்ட திட்டங்கள் இந்த ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட தொடரும் என்று கூறினார். பள்ளி மாணவர்களுக்கான உணவு தரமாக இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: PM SHRI திட்டத்துக்கு அனுமதியா..? கொள்கையில் சமரசமா..? அமைச்சர் ராஜ்மோகன் பளீச் பதில்..!