சமீபத்தில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட மாநில அரசு தான் அதிக நிதி ஒதுக்கும் நிலை இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: குஜராத் துயரச்சம்பவம்! அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி.. கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல்!!

படையப்பா படக் காமெடி போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது எனச் சேலம் அரசுவிழாவில் தான் பேசுகிறது சுட்டிக்காட்டிய அவர், பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும் என விளக்கம் அளித்தார்.

அது நாளிதழ் ஒன்றில் தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளதாகவும், இனியாவது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்ல...அமித்ஷா சொன்ன பரபரப்பு தகவல்!