தமிழகத்தில் தற்போது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வரின் அறிவிப்புகள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சிலிண்டர் பிரச்சனை உள்ளவரை ஹோட்டல்களுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உணவகங்கள் மின் அடுப்புகளை பயன்படுத்துவதால் அதிக மின்சாரம் தேவைப்படுவதால் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான மின் பயன்பாட்டின் அளவை மீறி உபயோகிக்கும் போது யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மட்டும் இன்றி அனைத்து வகை உணவகங்களுக்கும் யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் சலுகை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!
சிறு குறு நிறுவனங்கள் மின் அடுப்புகள் கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்பிஜி பற்றாக்குறையால் விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் வேளாண்மை பொருட்களை உழவர் சந்தையில் கட்டுப்பாடு இன்றி விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விற்பனை தொடர்பாக கண்காணிக்க மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் டீசல் ஒன்பது நாட்களுக்கு கையிருப்பு இருப்பதாகவும் மாநில அரசு என்னை நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!