தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று முன்தினம் காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்தது.

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் சென்னையிலிருந்து 950 km தொலைவில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நெருங்கும் மோன்தா CYCLONE... தப்புமா சென்னை?.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!
ஆறு மணி நேரமாக 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மோன்தா புயல் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கு 790 கிலோமீட்டர் தொலைவில் புயல் சின்னம் இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு பகுதியில் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: WARNING... மக்களே கவனமா இருங்க..! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!