முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமானவை என பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்கு தமிழக அரசின் அமைச்சர் அருண்ராஜ் உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நயினார் நாகேந்திரன் இயலாமையில் பேசுவதாகக் குறிப்பிட்டு, தங்கள் கட்சியும் அரசும் செயல்கள் மூலமே பதிலளிக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சர்ச்சை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய ஒரு கருத்தை மையமாகக் கொண்டு எழுந்தது. சட்டப்பேரவையில் பேசும்போது முதலமைச்சர் ஒரு சூழலில் “அப்பாவை காணோம்” என்ற தொனியில் ஒரு கருத்தை முன்வைத்தார். அந்தப் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக நயினார் நாகேந்திரன் பேசியபோது, “சட்டப்பேரவையில் போய் அப்பா எங்கே, அப்பா எங்கே என்று தேடினால் எப்படித் தெரியும்? வீட்டிற்குப் போய் அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்று தெரியும்” என்று கூறினார்.

இந்த வார்த்தைகள் முதலமைச்சரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் விளக்கினர். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தனிப்பட்ட குடும்ப விஷயங்களை, குறிப்பாகத் தாயை இணைத்துப் பேசுவது அநாகரீகமானது என்ற கருத்து பரவலாக எழுந்தது.
இதையும் படிங்க: 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
முதல்வர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரன் மீது பிஜேபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வர்தினி புகார் கொடுத்துள்ளார்
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!