விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில் அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித நீர் தெளிப்பதற்காகக் குழந்தையுடன் தர்காவிற்கு வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தி தாக்கியதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நய்யனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்தக் கொடும் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது என்றால் திமுக அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கையும் குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தானே அர்த்தம் என கேள்வி எழுப்பினார். அதிலும் அப்துல் அஜீஸ் மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், அவர் தர்காவின் தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார் என்று கேட்டார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தைப் பற்றி திமுகவின் போலி பெண் போராளிகளும், பிற தலைவர்களும் இதுவரை வாய் திறக்காதது ஏன் என்று கேட்டார். இஸ்லாமிய மக்களின் ஓட்டு வங்கி அடி வாங்கிவிடும் என்ற அச்சமா அல்லது வழக்கம்போல இந்தப் பாலியல் வழக்கிலும் உடன்பிறப்புகள் ஒளிந்துள்ளனரா என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: "3 மினிட்ஸ் கேப்" - கோவை மெட்ரோவுக்கு திட்டமிட்டு ஆப்பு வைத்த திமுக... நயினார் நாகேந்திரன் ஆவேசம்...!
சமூகநீதி, மத நல்லிணக்கம் குறித்தெல்லாம் பிறருக்கு வகுப்பெடுக்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தை எவ்வித சமரசமுமின்றி அணுக வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கழிவறையில் காசு பார்த்து... குப்பை வண்டியில் வைத்து சோறு... நல்லா இருக்கு முதல்வரே... சாடிய நயினார்...!