நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடி 11 ஆண்டுகளில் மூலதன கணக்கில் கணிசமான முறையில் 112 லட்சம் கோடி மூலதன செலவாக பயன்படுத்தியுள்ளார்கள்.
வந்தே பாரத், நான்கு வழிச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பணிகளை நிறைவேற்றியுள்ளார். 11 ஆண்டுகால ஆட்சியில் பாஜக தமிழகத்திற்கு மட்டும் 10 லட்சம் கோடி தனியாக நிதி கொடுத்துள்ளது.

திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து கலாச்சாரத்தை வளர்த்தெடுத்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையுமா? அல்லது கூட்டணி கட்சியினுடைய ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இபிஎஸ் தலைமையிலான ஆட்சி அமையும்.
இதையும் படிங்க: தவறி பாஜக ஆட்சி அமைத்து விட்டால்.. தமிழ்நாட்டில் அகற்றவே முடியாது.! கதறும் திமுக ஆதரவாளர் செந்தில்..!
கீழடியை மத்திய அரசு முடக்க நினைக்கிறதா என்ற கேள்விக்கு, கீழடியில் டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கிறதா என்பதை நேரில் சென்று நானும் ஆய்வு செய்துவிட்டு அதன் பிறகு மத்திய அரசை அறிவுறுத்துவேன்.

எங்கேயும் மதவாதம் இருக்கக் கூடாது. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்து தான். திமுக தமிழகத்தில் தேர்தலில் தனியாக நிற்க தயாரா. எங்களை பலம் இல்லாத கூட்டணி என்று விமர்சிக்கிறார்களே அப்பொழுது அவர்கள் தனியாக நிற்க தயாரா என சவால் விடுத்தார்.
அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வது ஒரு பில்டப் என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவரது விருப்பம் ஆசை அப்படி உள்ளது.
அவரவர் பலம் அவரவருக்கு தான் தெரியும். தேர்தல் முடிந்து மக்கள் வாக்களித்த பின்னர் தான் அது தெரியும் என்றார்.

மதுரை வந்திருந்த அமித் ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக்கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக இருந்து வந்தது. ஏனெனில் தமிழக அரசியலில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது கிடையாது. அப்படிருக்கையில் அமித் ஷா மீண்டும் மீண்டும் இதே வார்த்தையைக் கூறி வந்த நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு முற்றிலும் எதிரான கருத்தைக் கூறியிருக்கிறார். இது பாஜகவினரை அப்செட்டிலும், அதிமுகவினரை குஷியிலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நடப்பது திருட்டு முன்னேற்ற கழக ஆட்சி..! பந்தாடிய இபிஎஸ்..!