நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!
தனது வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இந்தியாவின் கனவுகள் மேலும் பெரிதாக வேண்டும் என்றும், பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 திட்டத்தின் வரலாற்று வெற்றியை நினைவுகூரும் வகையில் இன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டு மக்கள், இளம் தலைமுறையினர் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக சந்திரயான்-3 திட்டம் அமைந்தது. கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம் நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. உலக விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்திய இந்த சாதனை, நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: விண்வெளி வீரர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி! ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26 கோடியில் உருவாகும் ‘ககன்யாத்ரி நிவாஸ்’
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலவின் பகுதி ‘சிவசக்தி’ என பெயரிடப்பட்டது. சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை போற்றும் வகையில் ஆகஸ்ட் 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியத்துவம், இந்தியாவின் விண்வெளி சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இந்தியாவின் கனவுகள் மேலும் பெரிதாக வேண்டும் என்றும், பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் இளம் தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்தடுத்த முயற்சிகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.