×
 

“சவால்களை கண்டு அஞ்சாதீர்கள்!” “கேள்வி கேட்க தயங்காதீர்கள்” – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

மாணவர்கள் தங்களது ஆர்வத்தை ஒருபோதும் இழக்காமல் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பெரும் சவால்கள் வந்தாலும் அதைக் கண்டு அஞ்சாமல், அதற்கான தீர்வுகளைத் தேட துணிவுடன் செயல்பட வேண்டும் என்று இளம் தலைமுறையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், தொடர்ந்து கற்றுக்கொள்பவர்களே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அவர், ஐஐடி மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என குறிப்பிட்டார். நாட்டுக்காக சிறந்த சாதனைகளை செய்ய வேண்டும் என்ற கனவுடன் கல்லூரியை விட்டு வெளியேறும் இளைஞர்களை பார்ப்பது பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைப் பாதையும், கனவும் தனித்துவமானது என்றும் பிரதமர் தெரிவித்தார். மாணவர்கள் பட்டம் மட்டுமின்றி, நாட்டுக்கு பயனுள்ள பணிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: “யாரும் கவலைப்பட வேண்டாம்… நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” கூட்டணி எம்.பி.,க்களுக்கு மோடி உறுதி

கல்லூரியில் சேர்ந்த முதல் நாளையும், தற்போது பட்டம் பெறும் நாளையும் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறிய மோடி, இந்த கல்விப் பயணம் எதிர்காலத்தில் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்றார். 20 முதல் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறும்போதும், தங்களது கல்லூரி நாட்களையும் தங்களுக்கு வழிகாட்டியவர்களையும் மாணவர்கள் நினைவுகூர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

உலகம் தொடர்ந்து வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பம், தொழில்துறைகள் மற்றும் வேலைவாய்ப்புகளின் தன்மை என அனைத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் உலகம் எந்த நிலையில் இருக்கும் என்பதை தற்போது யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

எனவே, மாணவர்கள் தங்களது ஆர்வத்தை ஒருபோதும் இழக்காமல் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான மனப்பான்மையே மாறிவரும் உலகில் அவர்களை முன்னிலையில் வைத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் வளர்ச்சிக்கு இளம் தலைமுறையினர் முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து ஏராளமான தொழில்முனைவோர் உருவாகி வருவதாகவும், ஒரு கல்வி நிறுவனத்தால் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறன் ஒன்றிணைந்தால் இந்தியா எவ்வளவு பெரிய சக்தியாக மாறும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பெரிய சவால்களை எதிர்கொள்ளும்போது பயப்படாமல், அவற்றுக்கு புதிய தீர்வுகளை கண்டுபிடிக்க மாணவர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார். போதிய சிந்தனையோ புரிதலோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் பழைய கருத்துகள் மற்றும் நடைமுறைகளை கேள்வி கேட்கும் துணிவும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இமாச்சலில் பயங்கரம்! மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்! பிரதமர் மோடி இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share