ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்ததிலிருந்து குறைந்து, 80 டாலராக உள்ளது.இது நமது இறக்குமதி செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஈரான்-அமெரிக்க அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய நன்மையைத் தரும் என அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகச் சிறந்த செய்தி. ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்த நிலையில் தற்போது 80 டாலராகக் குறைந்துள்ளது. இது நமது எண்ணெய் இறக்குமதிச் செலவை கணிசமாகக் குறைக்கும்” என்றார்.
மேலும், “இந்தியத் தொழில்துறை இனி ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) முழுப் பலனையும் பெற முடியும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தால், இந்த ஒப்பந்தங்களில் உள்ள வரி விலக்கு சலுகைகளை தொழில்துறை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. ஆனால் தற்போதைய சூழல் இதற்கு உகந்ததாக உள்ளது” என அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்! இதெல்லாம் கூடாது! பட்டியலிட்டார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!
ரூபாய் மதிப்பு குறித்தும் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். “சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மட்டுமல்ல, பல ஆசிய நாடுகளின் நாணயங்களும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனால், அமைதி ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு நிச்சயம் வலுப்பெறும்” என்றார்.
எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரும் அளவில் சார்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைவு பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பெட்ரோலியப் பொருட்கள் செலவை குறைக்கவும் உதவும். மேலும், தொழில்துறை உற்பத்திச் செலவு குறைவதால் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
ஒட்டுமொத்தத்தில், அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்தியாவுக்கு மலிவான எண்ணெய், குறைந்த இறக்குமதிச் செலவு மற்றும் வலுவான ரூபாய் மதிப்பு ஆகிய மூன்று பெரிய நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீங்கள் குழப்பமடைவீர்கள்! அதிபர் ட்ரம்ப் மீண்டும் விஷமத்தனம்! அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?