1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது இந்திய அரசு. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், விருது பெறுபவர்களை இந்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒரு குழு தேர்ந்தெடுக்கிறது. இதில் உள்துறை செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு முக்கிய நபர்கள் உள்ளனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளை பிரதமர் மற்றும் இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கிறது. விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுபவர்களுக்கு ஜனாதிபதி கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் ஒரு பதக்கம் வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களின் பெயர்கள் விழா நாளில் இந்திய அரசிதழில் வெளியிடப்படும்.

மிக உயரிய சிவில் விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் சடங்கு விழாக்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மூச்சு விட்டால் விசில் சத்தம்... குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கால்நடை விஞ்ஞானி மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன் க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கும் நீலகிரியைச் சேர்ந்த குறும்பா ஓவியர் ஆர் கிருஷ்ணாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்கல சிற்பி கலியப்பர் கவுண்டருக்கும், புதுச்சேரி சிலம்ப கலைஞர் கே. பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறியப்படாத நாயகர்கள் பிரிவில் அங்கே கௌடா என்ற கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கும், மகாராஷ்டிராவை சேர்ந்த ஆர்மிடா பெர்னாண்டஸ் குழுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு மாத காலமாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்..! பிராட்வே பகுதியில் குவிந்து போராட்டம்..!