×
 

ரேஷன் கடைகளில் ரகசிய சர்வே! திமுக திடீர் ப்ளான்!! அதிருப்தியில் உள்ள மகளிரை சமாதானப்படுத்த முயற்சி!

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத காேடிக்கணக்கான பெண்கள் திமுக மீது கடும் கோபத்தில் இருப்பது அவர்கள் நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 2023 செப்டம்பர் முதல் செயல்பாட்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியாக இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்தே தொடங்கப்பட்டது. 

1.31 கோடி தகுதியான பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான 3,000 ரூபாயும், கோடை சிறப்பு நிதியாக 2,000 ரூபாயும் என மொத்தம் 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்த 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதால், உரிமைத் தொகை கிடைக்காத கோடிக்கணக்கான பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுக நடத்திய ரகசிய சர்வேயில் இந்த அதிருப்தி தெளிவாகத் தெரிய வந்துள்ளது. உரிமைத் தொகை கிடைக்காத பெண்களின் ஓட்டுகள் எதிர்க்கட்சிகளுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில், திமுக தலைமை அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக எதிராக வந்த சர்வே!! முதல்வர் ஸ்டாலின் திக்! திக்!! ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை இதுக்குதானா? வெளியான திடுக்!

திமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: “முன்பு 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டபோது அதிருப்தி குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது ஒரே மாதத்தில் 5,000 ரூபாய் கிடைத்ததால், கிடைக்காதவர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் சர்வே தொடங்கியுள்ளோம்.”

ரேஷன் கடை ஊழியர்கள் உரிமைத் தொகை பெறாத பெண்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, “சொந்த வீடு உள்ளதா? வீட்டில் எத்தனை பேர் சம்பாதிக்கிறார்கள்? அரசு திட்டங்களில் எதில் பயன் பெற்றுள்ளீர்கள்?” போன்ற கேள்விகளை கேட்டு குறிப்பெடுத்து வருகின்றனர். இதன் மூலம் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, உரிமைத் தொகை வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலினின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்திற்காக என்று கூறி சில கேள்விகளை கேட்கச் சொல்லியுள்ளனர். ரேஷன் ஊழியர்கள் “இது உரிமைத் தொகை விரிவாக்கத்திற்கானதா என்று எங்களுக்கு தெரியாது” என நழுவுகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் அதிருப்தியில் உள்ள மகளிரின் மனதை குளிர்வித்து, அவர்களின் ஓட்டுகளை தக்கவைக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது.

இருப்பினும், உரிமைத் தொகை இன்னும் பலருக்கு கிடைக்காத நிலையில், இந்த சர்வே முயற்சி தேர்தல் நோக்கிலானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. திமுக இதை மறுத்து, “அனைத்து தகுதியான மகளிருக்கும் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்” என உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: தோல்வி பயத்துல என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!! அஞ்சி ஆயிரம்! தேர்தல் நேரத்து பணம் - திமுகவின் Patchwork-ஐ விளாசும் இபிஎஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share