சென்னையை கைப்பற்ற மோடி போட்ட ஸ்கெட்ச்! களமிறங்கும் பாஜக படை! இது கேரளா ஃபார்முலா!
திருவனந்தபுரம் போல சென்னையிலும் கூடுதல் கவனம் செலுத்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவு கொடுத்துள்ளார். கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக மாநகராட்சியை கைப்பற்றியது போல, சென்னையிலும் கட்சியை வளர்க்க அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் பாஜகவுக்கு சட்டசபையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இது பிரதமர் மோடிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வெற்றியை ஹரியானா மற்றும் திரிபுராவில் தனித்து ஆட்சி பிடித்ததற்கு சமமானது என்று மோடி பாஜக தலைவர்களிடம் சொன்னார்.
கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை வந்த மோடி, திருவனந்தபுரம் வெற்றியை எடுத்துக்காட்டி பேசினார். சென்னை மாநகராட்சியிலும் பாஜகவை வளர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினார். 2024 லோக்சபா தேர்தலில் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள பல சட்டசபை தொகுதிகளில் திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக இரண்டாம் இடம் பிடித்ததை மோடி சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: உங்களுக்கு ரெண்டு சீட்டு! மகனுக்கு எம்.பி போஸ்ட்டு?! ஓபிஎஸ்-யிடம் டீல் பேசிய சேகர்பாபு! கசிந்தது சீக்ரெட் டீல்!
பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் போல சென்னையிலும் மக்கள் பாஜகவை ஏற்க தயாராக உள்ளனர் என்று மோடி நம்புகிறார். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்கள்தான் பாஜகவின் முக்கிய ஓட்டு வங்கி.
சென்னையில் இவர்கள் அதிகம் உள்ளனர். எனவே, சென்னையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். சிறப்பு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துங்கள் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு உத்தரவிட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவிடம் சென்னையில் அதிக தொகுதிகளை பாஜக கேட்டுள்ளது. விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, துறைமுகம், அண்ணா நகர், எழும்பூர், கொளத்தூர் போன்ற தொகுதிகளை குறிப்பிட்டு குறைந்தது நான்கு தொகுதிகளை பாஜக கோரியுள்ளது.
சென்னையில் குறைந்தது இரண்டு எம்எல்ஏக்களை பெற்றால், அடுத்த மாநகராட்சி தேர்தலில் இரட்டை இலக்கத்தில் (10 அல்லது அதற்கு மேல்) கவுன்சிலர்களை வெல்லலாம் என்று பாஜக கணக்கு போட்டுள்ளது. இதற்காக காய் நகர்த்தி வருகிறது என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தமிழக அரசியலில் பாஜகவின் புதிய உத்தி. சென்னை போன்ற பெரு நகரங்களை கைப்பற்றினால், மாநில அளவில் கட்சி வளர்ச்சி வேகமாகும். மோடியின் இந்த உத்தரவு தமிழக பாஜகவுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஹாப்பி 75th பர்த்டே ஓபிஎஸ்!! பிறந்தநாள் கொண்டாடும் ஓ.பன்னீர்செல்வம்!! இன்று கூட்டணி அறிவிக்க வாய்ப்பு!