×
 

பாஜக வெற்றிக்கான தொகுதிகள் கிடைக்கல!! கோவத்தில் கொந்தளித்த கோயல்!! கைவிரித்த எடப்பாடி!

'பா. ஜ.,வுக்கு, சில தனிநபர்கள் விரும்பிய தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க., தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. விரும்பிய தொகுதிகள் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது' என, தமிழக பா.ஜ., மைய குழு கூட்டத்தில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேசியுள்ளார்.

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) தொகுதி பங்கீடு சர்ச்சையாக மாறியுள்ளது. பாஜகவுக்கு வலுவான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கிடைக்கவில்லை என்று கட்சி நிர்வாகிகள் இடையே அதிருப்தி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சென்னை தி.நகரில் உள்ள ஒரு இடத்தில் பாஜக மையக் குழு கூட்டம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் பீயூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற கோயல் முகத்தில் கோபம் தெரியும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய பீயூஷ் கோயல், “தமிழக தொகுதிகள் நிலவரம் குறித்து எனக்கும் மேலிடத் தலைவர்களுக்கும் தெரியாது. இங்குள்ள நிர்வாகிகள் தேர்வு செய்து கொடுத்த தொகுதிகளையே அதிமுகவிடம் கேட்டோம். 40 தொகுதிகள் கேட்டபோது 27 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அந்த தொகுதிகள் வெளியானதும் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளாகப் பார்த்து கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று புகார் எழுந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு விஜயால் உண்டான அரசியல் நெருக்கடி! தவெகவை சமாளிக்க வீடு வீடாக செல்லும் திமுக இளைஞரணி!

மேலும் அவர், “விசாரித்தபோது, கட்சியின் வெற்றிக்காக அல்லாமல் சில தனிநபர்கள் விரும்பிய தொகுதிகள் மட்டுமே அதிமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. விரும்பிய தொகுதிகள் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இனி பேசி பயனில்லை. கிடைத்த தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழக பாஜக வட்டாரங்கள் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை (த.வெ.க.) சேர்க்க கோயல் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததும் அவரது கோபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தன. அதிமுகவுடன் இறுதி செய்யப்பட்ட 27 தொகுதிகளில் பலவும் பலவீனமானவையாகக் கருதப்படுவதால், பாஜக நிர்வாகிகள் இடையே குழப்பம் நிலவுகிறது.

இந்த சூழலில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து திமுக அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பீயூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் இந்த தொகுதி பங்கீடு சர்ச்சை பெரும் பேச்சாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share