சென்னை பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை "முட்டாள்" என விமர்சித்து திமுக எம்பி ஆ. ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சு அமித் ஷா மதுரையில் பேசிய கருத்துகளுக்கு பதிலடியாக கூறியது. எதிரிகள் வெவ்வேறு வடிவத்தில் வருவார்கள் என்றும் மதுரைக்கு வந்த அமித் ஷா, டெல்லியை பிடித்துவிட்டோம், ஹரியானாவை பிடித்துவிட்டோம், மராட்டியத்தை பிடித்துவிட்டோம், அடுத்து தமிழ்நாடு எனவும் கூறியுள்ளார்., முட்டாள்... டெல்லியில் கெஜ்ரிவாலை தோற்கடித்தீர்கள், ஹரியானாவில் ஒரு தனி மனிதனை தோற்கடித்தீர்கள், ஆனால் ஸ்டாலின் ஒரு தனி மனிதனல்ல, அவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் உள்ளது என்று பேசினார்.

இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆ. ராசாவின் இந்த விமர்சனம் அவரது முந்தைய சர்ச்சைக்குரிய பேச்சுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசியபோது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த முறை, அமித் ஷாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.
இதையும் படிங்க: இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆ. ராசாவின் புகைப்படங்களை கிழித்து பாஜகவினர் கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2ஜி ஊழல் ஆ.ராசா நாவை அடக்கி பேச வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு கட்டளை தளபதி இபிஎஸ் தான்... அமித் ஷாவின் பல்லை பிடுங்கிய ராஜேந்திர பாலாஜி