தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், முக்கியமான ஒன்றாக டெல்லியில் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கே. வெங்கடநாராயணாவை நியமித்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நியமனத்தை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணாவை தவெக அரசு நியமித்திருப்பது, ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது’ போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கர்நாடகா பின்னணியைக் கொண்ட ஒருவரை நியமித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அரசாணை மூலம் நடைபெற்றது. கே. வெங்கடநாராயணா, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட KVN Productions நிறுவனத்தின் நிறுவனர் இவர். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர், கம்பெனி செயலாளர் மற்றும் சட்டப் பட்டதாரி என பல தகுதிகள் கொண்ட இவர், கர்நாடகாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அவரது நிறுவனம் பெங்களூரில் உள்ளது மற்றும் கன்னட மொழியிலும் புலமை பெற்றவர். தமிழ்நாட்டில் காவிரி நீர் பங்கீடு பிரச்னை நீண்டகாலமாக தொடர்கிறது.
இதையும் படிங்க: விவசாயிகளிடம் வசூல் சர்ச்சை... தவெக ஒழுங்கு நடவடிக்கை..! கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலர் அதிரடி நீக்கம்..!!
கர்நாடகா மாநிலத்துடன் இடையறாத பேச்சுவார்த்தைகள், உச்ச நீதிமன்ற வழக்குகள், போராட்டங்கள் என பல்வேறு கட்டங்களில் தமிழ்நாட்டின் உரிமைக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை உள்ளிட்ட புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் விவசாயத்தையும், குடிநீர் தேவையையும் பாதிக்கும் என அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில், கர்நாடகா பின்னணி கொண்ட ஒருவரை டெல்லியில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிப்பது, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளிலும், காவிரி விவகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இரண்டே கேள்வி... நெற்றில் பொட்டில் அடித்தது போல் விஜயை தெறிக்கவிட்ட கனிமொழி... முதல் கேள்வி தான் ஹைலைட்டே...!