தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடியை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது.
2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 50,000 ரூபாய் வரை தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்..! பிஞ்சு உயிர் பறிபோன சோகம்... பெற்றோருக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்..!!
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயக் கடனை 100% தள்ளுபடி செய்யக் கோரி, விவசாயியைப் பாடையில் படுக்க வைத்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி உள்ளனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த வன்முறை..!! 11 பேர் உயிரிழப்பு..!!