பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுத்தடுத்து பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்பதில் தொடங்கி, அம்மாவை பாட்டில் வீசி தாக்கினார் என்பது வரை பல குற்றச்சாட்டுக்களால் டேமேஜ் செய்துள்ளார்.
அடிக்க ஆள் வைத்திருக்கும் அன்புமணி:
ஆறு வருடங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் போது சென்றிருந்தேன். அதை முடித்து விட்டு சென்னை கிளம்பியபோது, பாமக கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார். அப்போது விமானத்திலயே இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு எதுவும் பேசாமல் தைலாபுரம் வந்துவிட்டேன்.
இதையும் படிங்க: மனைவியால் வந்த சிக்கல்; காலைக் கட்டிக்கொண்டு அழுத அன்புமணி - இக்கட்டான முடிவெடுத்த ராமதாஸ்...!

தனக்கு 14 பஞ்சாயத்தினை அன்புமணி வைத்தார். அந்த பஞ்சாயத்தில் 34 அமைப்புகளை உருவாக்கியவர்கள் தன்னிடம் சமாதானம் செய்தார். அப்போது மக்களை பார்க்க அன்புமணி போகட்டும் கட்சியை ராமதாஸ் பார்க்கட்டும் என தெரிவித்தார்கள். அதன் பிறகு வீட்டின் கேட்டினை சாத்தி வீட்டிலையே இருக்கட்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பொய் கூசாமல் அன்புமணி ராமதாஸ் பேசுவார், நான் கூட்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென 108 மாவட்ட செயலாளர்களுக்கு அவரே கூறியிருந்தார். நான் கூட்டிய கூட்டத்திற்கு 8 பேர் வந்தார்கள் அன்றே இறந்துவிட்டேன் மறுநாள் பிழைத்து விட்டேன்.

அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவேன் என்பது பொய் இதை உலகம் ஏற்குமா?, சமூக ஊடக பேரவையில் தவறாக போட்டவர்களை அடிக்க 6 பேரை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
பிரச்சனைக்கு இதுவே தீர்வு:
பொதுக்குழுவில் கவுரவ தலைவராக ஜி.கே மணியை போட்டுவிட்டு தலைவராக அன்புமணியை போட்டு இருந்தேன். மருமகள் செளமியா 8 நாட்களில் தலைவரை மாற்ற வேண்டுமென தன்னிடம் கூறினார். ஜோசியம் பார்த்து ஒன்னரை மாதம் கழித்து தலைவராக அறிவித்து அன்புமணியை கட்டி பிடித்து அரவனைத்து கண்ணீர் வடிச்சேன்.

அமைச்சர் பதிவு தலித் ஏழுமலைக்கு வழங்கினேன். விருப்பம் இல்லாமல் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினேன். எல்லா சத்தியங்களை மீறிட்டேன் எந்த பதவிக்கும் செல்ல மாட்டேன். அப்பா , அய்யா கொடுத்த செயல்தலைவர் பதவி வைத்து கட்சியை வளர்ப்பேன் அல்லது அடிப்டை உறுப்பினராக இருந்து செயல்படுவேன் என அண்புமணி கூறினால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு. கண்ணாடியும் உடையவில்லை எந்த பிரச்சனையும் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன்... அதிரடி காட்டும் ராமதாஸ்!