தமிழ்நாட்டின் தொழில்மயமாக்கலில் மற்றொரு முக்கியமான அத்தியாயமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சொகுசு கார் உற்பத்தித் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் ஸ்டாலின் ஓட்டினார். இந்தத் தொழிற்சாலைக்கு ரூ.9,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் பரவியிருக்கும் இந்த ஆலை, சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சொகுசு மாடல்களை உற்பத்தி செய்யும் முதல் ஆலையாக கருதப்படுகிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட பல்வேறு உயர்தர கார்களை இங்கு தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 2024 செப்டம்பர் 28-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 16 மாதங்களுக்குள் உற்பத்தியைத் தொடங்கும் அளவுக்கு விரைவாக முன்னேறியுள்ளது. இது தமிழக அரசின் தொழில் ஊக்குவிப்பு கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவின் வலிமையை பறைசாற்றுகிறது. ஆலை முழுமையாக இயங்கத் தொடங்கியதும், ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் படிப்படியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு உணவு..! விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!
இந்தத் தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, முழு தமிழகத்திற்குமே பெருமை சேர்க்கும் ஒன்று. ஏனெனில், இதன் மூலம் நேரடியாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், தொடர்புடைய துணைத் தொழில்கள், சப்ளை செயின் மூலம் இன்னும் பல ஆயிரம் வேலைகள் உருவாகும். உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்குமான உற்பத்தியும் இங்கிருந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டணி முறிவா? திமுகவுக்கு ஆதரவு இல்லையா..? தவாக தலைவர் வேல்முருகன் திட்டவட்டம்..!