தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஊகங்கள் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
இந்த பேச்சுகளுக்கு முக்கிய தொடக்கப் புள்ளியாக ஆந்திர மாநில துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விஜயுடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும், தவெகவை NDA கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ளும் வலுவான மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட சிலரும், திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றும், குறிப்பாக விஜய் NDA-யில் இணைய வேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ரகசிய தகவல்கள் கசிந்ததாகவும், இது தமிழக அரசியலில் 'மெகா ட்விஸ்ட்' என்று அழைக்கப்படும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்..!!
என் டி ஏ கூட்டணியில் விஜய் இணைவது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், கூட்டணி முடிவுகள் கடைசி நேரத்தில் கூட மாறும் என்று தெரிவித்தார். நாங்கள் தோழமையை மதிக்க கூடியவர்கள் என்று தெரிவித்த அவர் தோளில் வைத்து தூக்கி கொண்டாடுவோம் என்று கூறினார். யார் தங்களுடன் வந்தாலும் அவர்களுக்கு உரிய பதவி கொடுத்து உச்சி முகர்ந்து மகிழ்வோம் என்று தெரிவித்தார். தங்களோடு தோழமையில் உள்ள கட்சிகளுக்கு தாங்கள் பற்றி தெரியும் என்று கூறினார்.
இதையும் படிங்க: TVK Vs NTK: “டுபாக்கூர் பொலிடிசியன்” - சீமானை பங்கமாய் கலாய்த்த தவெக தலைமை பேச்சாளர்....!