திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தன்னை யாரும் மிரட்டுவதாக அமைச்சர் சொல்கிறார் என்று குறிப்பிட்டார். மிரட்டல் இருப்பதாக அமைச்சரே சொல்கிறார் என்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையினில் சாமானிய மக்கள் பாதுகாப்பு நிலை என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மின்விநியோகத்தை சீராக்குவதற்கு ஒரு ஆய்வுக் கூட்டத்தைக் கூட நடத்தவில்லையே ஏன் என்ற கேள்வி எழுப்பி உள்ளார். முறையான ஆய்வுக் கூட்டம் நடத்தி மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்மட்ட அதிகாரிகளை மட்டுமே சந்திக்கும் அமைச்சர் அடுத்த கட்ட ஊழியர்களை சந்திப்பதில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் துறை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஆராயாமல் பேசுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபோதே மின்வாரியம் ஒன்றரை லட்சம் கோடி கடனில் இருந்ததாக குறிப்பிட்டார். ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார். மின்வெட்டை முதலில் சீரமையுங்கள் என்றும் பின்னர் துறையை நீங்கள் சீரமைக்கலாம் எனவும் தமிழக வெற்றி கழகத்திற்கு செந்தில் பாலாஜி அறிவுரை வழங்கினார். தமிழக வெற்றிக்கழக அமைச்சருக்கு துறை சார்ந்த விவரங்கள் மற்றும் புரிதல் இல்லாததால் தேவையின்றி குறை கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முந்தைய அரசின் ஊழல்களை மூட நினைக்கிறீங்களா..? நயினார் சரமாரி கேள்வி..!!
ஆடத் தெரியாதவர்கள் வீதி கோணல் என்பார்கள் அதுபோல அமைச்சர்கள் பேசுவதாகவும் விமர்சனம் செய்திருக்கிறார். திட்டங்களுக்கு அவகாசம் கேட்பது பரவாயில்லை என்றும் ஆனால் சட்டம் ஒழுங்கு சீரமைப்பதற்கு கால அவகாசம் கேட்பது எப்படி என்றும் கேட்டுள்ளார் கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் எத்தனை வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் தமிழக வெற்றிக்கான அரசு மக்களின் நன்மதிப்பை இழந்து விட்டது. என்று கூறியுள்ள அவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பொருத்திருந்து பார்ப்போம் என்று பதில் அளித்தார். தமிழக வெற்றிக்கழக அரசு வெளிப்படைத்தன்மையில்லாததாக உள்ளது என மக்கள் கூறுவதாகவும் மக்கள் ரியல் ஆட்சி இல்லை இது ரீல் ஆட்சி என்பதை உணர்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரியல் அண்ட் ரீல்ஸ் எல்லாமே பொய் தான்... தவெகவை எள்ளி நகையாடிய திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்...!