தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக + காங்கிரஸ் கூட்டணி, அதிமுக + பாஜக கூட்டணி, தவெக, நாதக, ராமதாஸ் + சசிகலா கூட்டணி என வர உள்ள தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது.
இதனால் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸுக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்குலத்தோரின் செல்வாக்கை கணக்கில் கொண்டு கருணாஸுக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவருக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொண்டாட்டி, பிள்ளைங்க போனாலும் பரவாயில்லன்னு கவுந்து படுத்துக்கிட்டு... விஜய்யை கிழித்து தொங்கவிட்ட கருணாஸ்...!
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணியின் பக்கம் இருந்த கருணாஸ், அதன்பின் தி.மு.க கூட்டணிப் பக்கம் சாய்ந்தார். இந்த நிலையில்தான், வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் கூட்டணி அமைந்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவுடன் கூட்டணி அமைந்ததற்காக கருணாஸுக்கு முக்குலந்தோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது. சிவகங்கையில் கருணாஸுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், “வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை?” என கருணாஸ்க்கு எதிராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் அதில் எனக்கு ஓட்டு மக்களுக்கு வேட்டு, ஸ்டாலின் தொடரட்டும் கருணாஸ் திருந்தட்டும் முடியுமா? திரும்பிபார் திருவாடனையை. முக்குலத்தோர் என்று கூறும் மூடனே. வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? என நகரின் முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதனை ஒரு தரப்பினர் கிழித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து சிவகங்கை சட்டமன்றதெகுதி முக்குலத்தோர் பாதுகாப்பு என்ற பெயரில் இவ்வாறு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எதே... இபிஎஸ் பாஜக வட்ட செயலாளரா?... அதிமுக பொதுச்செயலாளரை அசிங்கப்படுத்திய கருணாஸ்...!