கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் மற்றும் உடந்தையாக இருந்ததாக கூறி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!
இந்த நிலையில் சிறுமியை கொலை செய்த வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சக கைதிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சக கைதிகள் அவரை தாக்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 10 மாதம் தலைமறைவு... தட்டித் தூக்கிய போலீஸ்...!! கதறி அழுத சுர்ஜித்தின் தாய்..!!