சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27 அன்று இந்தக் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி மற்றும் அவரது மகள் நிக்கிதாவின் காரில் வைக்கப்பட்டிந்த 10 சவரன் நகைகள் காணாமல் போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதில் சம்பத்தப்பட்ட காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

இதை தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே காவலர்கள் சீருடை கூட அணியாமல் அஜித்குமாரை மடப்புரம் காளியம்மான் கோயில் பின்புறம் பைப்பை வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தமாகா தலைவர் ஜிகே வாசன் சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியை முன்னாள் எம்பி உடையப்பன், முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன், மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி உள்ளிட்டோர வழங்கினர். மேலும் அஜித் குமார் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!