அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தனது தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அனுபவம் வாய்ந்த நான்கு மூத்த தலைவர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வக் குழுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
தொகுதி பங்கீட்டுக் குழுவைத் தவிர, டாக்டர் மு. தம்பிதுரை தலைமையிலான 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழுவையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இதில் செல்லூர் ராஜூ, ஆர். காமராஜ், கோகுல இந்திரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள நிலையில், இந்தக் குழுவினர் அடுத்த சில தினங்களில் தொகுதிகளை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஏற்கனவே 'அனைத்துக் குடும்பங்களுக்கும் ₹10,000 நிதியுதவி' மற்றும் 'குடும்பத் தலைவிகளுக்கு ₹2,000 உதவித்தொகை' உள்ளிட்ட கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிக்குத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே, அதிமுக தனது 'வார் ரூம்' (War Room) பணிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெக? - மாவட்ட செயலாளர்களுடன் என்.ஆனந்த் ரகசிய ஆலோசனை!