×
 

15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

15 நாட்களில் அரிசி விலை 30 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருவதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் “இரு நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்கப்பட்ட சாதாரண ரக பொன்னி அரிசி இப்போது ரூ.8 உயர்ந்து ரூ.60க்கு விற்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகியவை 50 ரூபாயிலிருந்து ரூ.65க்கு உயர்ந்துள்ளன. சன்னரக அரிசி ரூ.64லிருந்து ரூ.75 ஆகவும், இட்லி அரிசி ரூ.43லிருந்து ரூ.50 ஆகவும் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளார். 26 கிலோ எடையுள்ள அரிசி மூட்டையின் விலை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

பருவ மழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி குறைந்ததே இதற்குக் காரணம் என சிலர் கூறுவதாகவும், ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கடந்த ஆண்டு குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட மூன்று பருவங்களிலும் நெல் அமோகமாக அறுவடை செய்யப்பட்டதாகவும், நடப்பாண்டு குறுவை பருவம் இன்னும் முடிவடையாத நிலையில் இந்தக் காரணத்தை ஏற்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய அவர், “இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் சந்தையில் அரிசி புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

 

 

இதையும் படிங்க: "25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share