×
 

ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு..!

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு 5 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் கண்காட்சியை திறந்து வைத்தார்.

ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி மே 15 ஆம் தேதி (இன்று) தொடங்கி, 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த 127வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உதகைக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று மலர்கள் காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து மலர் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ந்தார்.

இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

முன்னதாக தாவரவியல் பூங்கா வரை முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்திய நிலையில் வழி எங்கிலும் காத்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: உதகை மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share