×
 

திமுகவில் அதிரடி மாற்றம்..! அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்கள்..! ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!

அமைப்பு ரீதியாக திமுகவில் 110 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள், உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கமாகும். இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன.

அந்த அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 22, 2026 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும், பல்வேறு அமைப்புரீதியான நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவற்றில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share