எங்க புள்ளைய கொன்னுட்டானே பாவி... உறவினர்கள் போராட்டம்... முற்றுகை..!
ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியரின் பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஷாலினி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். அவரை சேரல் கோட்டையைச் சேர்ந்த முனிராஜ் என்பவன் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து தன்னை காதலிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் முனிராஜ். அவரின் காதலை ஏற்க மாணவர் ஷாலினி மறுத்ததாக தெரிகிறது. மாணவியை தொடர்ந்து காதல் தொந்தரவு கொடுத்து வந்த முனிராஜ் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் மாணவியை கத்தியால் குத்திய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் சோதித்து பார்த்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். காதலிக்க மறுத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து முனிராஜ் தொல்லை கொடுத்தது தொடர்பாகவும் அங்கிருந்தவர்கள் கண்டித்ததால் விலகியது தொடர்பான காட்சிகளும் வெளியாகின.
இதையும் படிங்க: #BREAKING: துரத்தி துரத்தி காதல் தொல்லை… 12 ஆம் வகுப்பு மாணவியை குத்திக் கொலை செய்த கொடூரம்…!
இந்த நிலையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். மாணவியை வயிறு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்த முனிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொலையாளி முனிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராடி வருகின்றனர். தொடர்ந்து துறைமுகம் காவல் நிலையத்தை மாணவியின் பெற்றோர் முற்றுகையிட்டனர். காவல் நிலையத்தில் மாணவியை கொன்ற முனிராஜ் இருக்கலாம் என்பதால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டேஷனுக்குள் நுழையும் முயன்றதால் பூட்டு போட்டனர். மேலும் ஆத்திரத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: காமப்பேய்... அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... இயற்பியல் ஆசிரியருக்கு வலை வீச்சு...!