×
 

"தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக சட்டமன்றத்தில் குதிரை பேரம் மற்றும் ஊழல் நடந்ததாகக் கூறி ஆட்சியை கலைக்கக் கோரியும், சிபிஐ விசாரணை முடியும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபித்த போது மிகப்பெரிய அளவில் நிதி முறைகேடுகளும் குதிரை பேரமும் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிரடியாகப் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த அதிர்ச்சி மனுவில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிட்டுள்ளார். அந்த மனுவில், "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அரிதி பெரும்பான்மை (Absolute Majority) கிடைக்காத ஒரு தொங்கு நாடாளுமன்றச் சூழல் ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பு குறித்து மனுவில் சாடியுள்ள அவர், "ஆட்சி அமைப்பதற்கும், சட்டப்பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிலைநாட்டுவதற்கும் தேவையான எண்ணிக்கையை எட்டாததால், பிற கட்சிகளைச் சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தவெக பெற்றுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதுமட்டுமன்றி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையையும், கட்சியின் கொறடா (Whip) உத்தரவையும் அடியோடு மீறி, அக்கட்சியின் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாகச் சட்டப்பேரவையில் அதிரடியாக வாக்களித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் இந்த 24 சட்டமன்ற உறுப்பினர்களும் தனியாகப் பிரிந்து சென்று, தவெக அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் அதிமுக அசுர உடைப்பைச் சந்தித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் மற்றும் குதிரை பேரம் (Horse Trading) நடைபெற்றுள்ளது" என்று பூதாகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

ஜனநாயக முறைக்கு மாறாகத் தங்களது அதிகார பலத்தைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், "முறைகேடான வழிகளிலும், குதிரை பேரம் நடத்தியும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுத் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால், இந்தத் முறைகேடான தமிழக சட்டமன்றத்தை உடனடியாகக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த இமாலய ஊழல் விவகாரம் தொடர்பாகச் சுதந்திரமான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சிபிஐ புலனாய்வு முழுமையாக முடிவடையும் வரை, தமிழ்நாட்டில் சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று தனது மனுவில் மிகத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.

நாளை காலை ஆளுநர் மாளிகையில் புதிய கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி மனு, கோட்டை வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் மிகப்பெரிய புயலையும் அசுரப் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு மிக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share