×
 

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக, தற்போது தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக மக்களின் மனநிலை தற்போது ஆளும் கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதாகவும், திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தங்களை மீண்டும் அரியணையில் ஏற்றும் என்றும் குறிப்பிட்டார். மறைந்த நம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் விருப்பப்படி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த மெகா கூட்டணியில் இணைந்துள்ளோம். எங்களின் ஒருங்கிணைந்த உழைப்பு, 200 இடங்களுக்கு மேல் வெற்றியை ஈட்டித் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று அவர் சூளுரைத்தார். எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது என்றும் அவர் சாடினார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ள நிலையில், பிரேமலதாவின் இந்தக் கணிப்பு திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் களம் தற்போது விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தேமுதிகவின் இந்தத் திடீர் எழுச்சியும், நம்பிக்கையும் மற்ற கூட்டணிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. "நாளை நமதே" என்ற முழக்கத்துடன் களப்பணியைத் தொடங்கியுள்ள தேமுதிக, வரும் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகிவிட்டது.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share