×
 

விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!

விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தனது முதல் பரப்புரையை சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தார். இன்று பெரம்பூரில் நடைபெற இருந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு முன்னதாக, மார்ச் 26 அன்று தவெக சார்பில் சென்னை மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடம் பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் சந்திப்பு அல்லது அதனை ஒட்டிய பகுதியாக இருந்தது. 

ஆனால், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது மார்ச் 27 அன்று, அந்த இடத்தில் திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்டதாகவும், இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றங்கள் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், காவல் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து, அந்த இடத்தில் 3,000 பேர் வரை கூட முடியாது என்று கருத்து தெரிவித்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாற்று இடம் தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கண்ட பணிகள் காரணமாக காட்டப்படுவது முற்றிலும் தவறான தகவல் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

பெரம்பூர் முல்லை நகர் பகுதியில் சென்னை மாநகராட்சியால் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை என கூறியது. சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் குறுகிய பரப்பளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுவும் உடனே நிறைவு செய்யப்பட்டதாக கூறியுள்ளது.

 

இதையும் படிங்க: விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share