திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக மீதான அக்கறையை பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனை சந்தித்து திருமாவளவன் பேசி இருந்தார். அதேபோல் பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும் திருமாவளவன் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக்கு யார் தலைமை என்று எடப்பாடி பழனிசாமியா அல்லது அமித்ஷாவா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - பாஜக விரும்பி கூட்டணி அமைத்திருப்பதாக அமித்ஷா மட்டுமே சொல்லி கொண்டிருக்கிறார். இந்த கூட்டணியை என்டிஏ கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும். அதிமுக தலைமையில் கூட்டணியா? அல்லது பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வியும் எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உருவாகியுள்ள இந்த கூட்டணியை தலைமை வகித்து வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது அமித்ஷாவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள். என்ன அவசரம், என்ன அழுத்தம் என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை அதிமுக தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்ட பின், அந்த கூட்டணிக்கு விசிக செல்லுமா என்ற கேள்வியே தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!