திருவள்ளூர் அடுத்த அத்திங்கிகாவனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி
ராஜகோபால் (76) இவர் அப்பகுதியில் மாந்தோப்பு பகுதியில் அடுக்குமாடி வீடு கட்டி தனது மனைவி கௌசல்யாவுடன் -(70)கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்,அவரின் மகன்கள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டில் பின்புறம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் விவசாயத்திற்காக வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளனர்
கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜகோபால் மனைவி கௌசல்யா கழுத்தில் இருந்த 5 சவரண் தாலி தங்க சரடை பறித்து அவரை மிரட்டி அங்கிருந்து மாந்தோப்பு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். ராஜகோபால் குடும்பத்தினர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சம்பவம் தொடர்பாக வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்
இதையும் படிங்க: நள்ளிரவில் நடந்த பயங்கரம்... போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்...அடகு கடையில் 80 சவரன் நகைகள் கொள்ளை...!
வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர். மேலும் ராஜகோபால் வீட்டின் அருகாமையில் உள்ள லதா பாபு என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றி உள்ளதும் தெரியவந்துள்ளது,
திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரின் குடும்பத்தினரை மிரட்டி 60 சவரன் தங்க நகை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பேரதிர்ச்சி... வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை...!