தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கடந்த சில நாட்களாகத் தொடர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உடல்நிலை குறித்தத் தகவல்கள் உடனுக்குடன் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாகக் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிப்ரவரி 22 அன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போதும், அரசுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. காய்ச்சல் குறையாததால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை வீழ்த்துவேன் என சபதம்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரின் உடல்நலம் குறித்துத் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கேட்டறிந்ததோடு, விரைவில் அவர் நேரில் சென்று நலம் விசாரிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!