தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக நிறுவப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் நாளை முதல் புதிய சுங்க கட்டண உயர்வானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றி அமைக்கப்பட்ட சுங்க கட்டணங்களானது 23ஆம் தேதியான நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை புறவழிச்சாலை மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த கட்டணங்களானது உயர்த்தப்பட்டிருக்கிறது. கார், ஜீப், வணிக பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு என அனைத்து தரப்பு வாகனங்களுக்கும் இந்த கட்டண உயர்வானது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தான் சென்னையில் இருக்கக்கூடிய மிக முக்கிய சுங்கச்சாவடிகளான வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணமானது உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய கட்டண உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் வாகன ஓட்டிகளுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதோடு, விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
பொதுவாகவே சென்னை புறவழி சாலையில் இருக்கக்கூடிய வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சாலைகளில் குறிப்பாக கார் மற்றும் ஜீப்களுக்கு கடந்த முறை 55 ரூபாயானது வசூலிக்கப்பட்டு வந்தது, தற்போது 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 1,805 ரூபாயாக மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுதுரக வாகனங்களுக்கு 85 ரூபாலிருந்து 130ஆகவும், மாதாந்திர பாஸ் 2,915 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து, லாரிகளுக்கு 185 ரூபாயிலிருந்து 275 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல சூரப்பட்டு சுங்கச்சாவடியிலும் 75 ரூபாயிலிருந்து 115ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மாதாந்திர கட்டணமும் கிட்டத்தட்ட 2505 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இலவரக வாகனங்களுக்கும் கிட்டத்தட்ட 60 ரூபாயானது உயர்த்தப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கான சுங்கச்சாவடி கட்டணமானது 120 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மாதாந்திர கட்டணமும் 445ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அடுத்த சர்ச்சைக்கு அடிபோட்ட விஜய்... ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிக்கு முக்கிய அரசு பதவியை தூக்கிக் கொடுத்த முதல்வர்?
மிக முக்கிய சாலைகளில் ஒன்றான என்ஹெச் 66 திண்டிவனம் - கிருஷ்ணகிரி வழிதடத்தில் இருக்கக்கூடிய திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலையில் மூன்று முக்கிய சுங்கச்சாவடிகளானது இருக்கிறது. இந்த மூன்று சுங்கச்சாவடிகளிலுமே கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான கார் ஜீப்புகளுக்கான கட்டணம் 30 ரூபாயிலிருந்து 35 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கரியமங்கலம் சுங்கச்சாவடி, நாகம்பட்டி சுங்கச்சாவடி என இந்த மூன்று சுங்கச்சாவடிகளிலுமே கிட்டத்தட்ட 65 ரூபாயாக இருந்த சுங்கக்கட்டணம் 65ரூபாயிலிருந்து 90 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல மிக முக்கியமான வழித்தடங்களில் ஒன்றான வேலூர் விழுப்புரம் பகுதிகளில் இருக்கக்கூடிய என்ஹெச் 234 வழித்தடத்திலும் மூன்று சுங்கச்சாவடிகளானது இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகளானது வள்ளம், ஏனம், காரியானந்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏனம் காரியானந்தல் அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சென்னம்மாதேவி ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளிலும் கட்டணமானது 35 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக கார், ஜீப் வேன் ஆகியவற்றுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!