2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி தொடங்கி வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அறிமுகத்தை முழுமையாக்கும் விதத்தில் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தார். பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். விஜய் பிரச்சாரத்தை காண்பதற்காக ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
இதையும் படிங்க: மிரளப்போகுது ஸ்டேட்டு… விசிலு சத்தம் கேட்டு..!! திருச்சியில் பாட்டு பாடி வாக்குச் சேகரித்த விஜய்..!!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகியும் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா கார் காவலர் ஒருவரின் காலில் ஏறி இறங்கியுள்ளது. இதனால் காவலரின் கால் உடைந்ததாக கூறப்படுகிறது. வலியால் துடித்த காவலரை அங்கிருந்து தமிழக வெற்றி கழகத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். நடக்கக்கூட முடியாத அளவுக்கு அந்த காவலர் வலியால் துடித்த சம்பவம் மனதை கனக்கச் செய்தது.
இதையும் படிங்க: #BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!