தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் (தனி) தொகுதி ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தைக் கண்டுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்செல்வன், ஆளும் கட்சி அமைச்சரைத் தோற்கடித்துப் அபார வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்செல்வன் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் லோகேஷ் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சரான மதிவேந்தன், தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: 2026 காரைக்குடியில் சீமானை வீழ்த்தி தவெக வேட்பாளர் பிரபு அபார வெற்றி!

ராசிபுரம் தொகுதியில் அமைச்சரை வீழ்த்தி லோகேஷ் தமிழ்செல்வன் பெற்றுள்ள இந்த வெற்றி, தவெக-வின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் சபாநாயகரின் மகனான லோகேஷ் பெற்றுள்ள இந்த வெற்றி அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் தவெக-வை ஏற்றுக்கொண்டுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வெற்றியைத் தொடர்ந்து ராசிபுரம் பகுதியில் தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!