மதுராந்தகம் அருகே மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புதைத்த உடலை தோண்டி பரிசோதனைநகைக்காக கீழே தள்ளி கொலை செய்ததாக த வெக கிளை பொறுப்பாளர் கைது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன் கூலி தொழிலாளி கடந்த 23 ஆம் தேதி அவருடைய மனைவி முத்தம்மாள் தலையில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார். வீட்டில் வழுக்கி விழுந்து இறந்து இருந்திருப்பார் எனக் கூறி உறவினர்கள் அவரை அடக்கம் செய்தனர்.
பின்பு அவர் அணிந்திருந்த 5 சவரன் செயின் காதில் கம்பல் நகைகளை காணவில்லை என சந்தேகம் ஏற்பட்டதால் முத்தாலம்மன் அவர்களின் மகன்கள் வீரமணி உமாபதி இருவரும் மருவத்தூர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையில் மேல் மருவத்தூர் காவல்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம பொதுமக்கள் முன்னிலையில் சென்ற வாரம் புதைக்கப்பட்ட உடல் தோண்டப்பட்டு உடல் கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பிள்ளை புடிக்கிறவங்க மாதிரி எம்.எல்.ஏ.க்களை புடிச்சிட்டு இருக்காங்க... தவெகை போட்டு பொளந்தெடுத்த தமிழிசை...!
இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த எதிர் வீட்டுக்காரர் வாசுதேவன் என்பவர் முத்தாலம்மாள் இறந்த அன்று முதல் ஆள் தலைமறைவாகி உள்ளார் என தெரிய வந்தது. அதனால் சந்தேகத்தின் பெயரில் பெங்களூர் ஓசூரில் மறைந்து இருந்த அவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நகையை பறித்துக்கொண்டு மூதாட்டியை கீழே தள்ளியதாகவும் அதில் அவர் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் அவர் வழுக்கி விழுந்து இறந்ததாக இருக்க வீட்டு தரையில் தண்ணீர ஊற்றி சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கிளை நிர்வாகி என தெரிய வருகிறது. இச்சம்பவத்தின் மூலம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!