மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அதில் தொடர்ச்சியாக பல பகுதிகளில் மாற்றுக் கட்சியில் இருந்து இணைப்பு விழா நடைபெற்று வருகிறது. தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பாதையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்று தமிழகம் முழுவதும் தலைமைக் கழகத்தில் கூட முக்கிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வந்து இணைந்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பயணிக்கிறார்கள் என்றார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் தாமதம் குறித்த கேள்விக்கு, நீர் பிடிப்பு பகுதிகளை எடுப்பதில் மறு சீரமைப்பு செய்ய வேண்டியதாக இருக்கும். தேவையான நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீர் பிடிப்பு இடங்களை எடுக்கும் போது மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
அதிமுக கட்சி தலைமையின் செயல்பாடுகள் சில வருடங்களில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாஜக மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் கூட அதிமுகவை பாஜக உடன் இணைக்கும் பணியை கூட தயங்காமல் செய்வார். 40, 50 ஆண்டுகளாக அதிமுகவில் பணி செய்தவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். புரட்சித்தலைவர், அம்மாவை நம்பி உழைத்தவர்கள் பாதையை மறந்து திமுக உடனே பயணம் செய்ய முயற்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடுத்து என்ன செய்வார் இன்று பயணிக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள்.
இதையும் படிங்க: Hard disk திருட்டு... "தூர சக்தியை காப்பாற்ற நினைக்குதா பேரசக்தி"..? சிபிஐ விசாரணை நடத்த EPS வலியுறுத்தல்..!!
மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சியை இணைக்க கூட தயங்க மாட்டார் . அங்கு இருப்பவர்கள் குறுநில மன்னர்களாக சொத்துக்களை காப்பாற்றுவதற்காக அதிமுகவை பயன்படுத்துவார்கள். திமுகவினர் தலைமை வீட்டை பூட்டிக் கொண்டு விஜய் வருவதில்லை என்கின்றனர். கருணாநிதி குடும்பமாக இருந்தது ஸ்டாலின் குடும்பமாக மாறி தற்போது உதயநிதி ஸ்டாலின் குறிஞ்சி இல்லத்தின் கதவுகளைத் தேடி உள்ளனர் என்றார்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டம் குறித்த கேள்விக்கு, மத்திய அரசு மீதுள்ள வெறுப்பு அதிருப்தியை காட்டுகிறது நீட் கொண்டுவரப்பட்டதை அடுத்து போராட்டம் நடைபெறுகிறது. நீட்டில் குளறுபடி நடைபெறுகிறது தேர்வை கூட சரியாக நடத்த முடியவில்லை தவறான மாணவர்கள் எவ்வளவு பேர் உள்ளே சென்றுள்ளார்கள்.
தனியார் ஸ்டடி சென்டர்கள் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு ஒன்றிய அரசு வழிவகை செய்துள்ளது. மாணவர்களுக்கு உதவியாக இல்லை. மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பத்து வருடமாக டிஜிட்டல் என மோடி அரசு கூறுகிறது. காதில் கம்பளை கூட கழட்ட சொல்லி உள்ளே இவ்வளவு பெரிய முறை கேடும் நடந்தால் இதற்கு மேல் வெட்கக்கேடு எதுவும் இல்லை.
முறைகேடான குவாரி மூடப்பட்டுள்ளது அதற்கான அஸஸ்மென்ட் நடைபெற்று வருகிறது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது அதற்கான விசாரணை முடிந்த பின்பு தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டாரா..? உண்மையைப் போட்டு உடைத்த அதிமுக..!