தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தனது முதல் பரப்புரையை சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தார். இன்று பெரம்பூரில் நடைபெற இருந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு முன்னதாக, மார்ச் 26 அன்று தவெக சார்பில் சென்னை மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட இடம் பெரம்பூர் தொகுதியில் உள்ள முல்லை நகர் சந்திப்பு அல்லது அதனை ஒட்டிய பகுதியாக இருந்தது.
ஆனால், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது மார்ச் 27 அன்று, அந்த இடத்தில் திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்டதாகவும், இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றங்கள் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தான் போட்டியிட இருக்கும் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதற்காக விஜய் திட்டமிட்டு இருந்தார். பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்றுள்ளார். பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க விஜய் சென்றார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்று தங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு குறித்து எடுத்துரைத்ததுடன், புகார் மனுவை கொடுத்துள்ளார். அரசுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுவதாகவும், அவர்களை பணியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும் விஜய் புகார் தெரிவித்துள்ளார். மார்ச் 30ஆம் தேதி பிரச்சாரம் நடத்த உள்ள நிலையில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!