தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் 2024-இல் தொடங்கப்பட்ட புதிய அரசியல் கட்சி. இது தமிழ்நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருப்பதால், அதன் அமைப்பு முறையும் மிகவும் திட்டமிட்டு, திறம்பட கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட அளவிலான அமைப்பு இதற்கு மிக முக்கியமான அடித்தளமாக விளங்குகிறது.தவெக கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே, தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
இதன் பின்னணியில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பொதுவாக இரண்டு அல்லது மூன்று சட்டமன்றத் தொகுதிகளை கவனித்துக்கொள்ளும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது கட்சிப் பணிகளை துரிதமாகவும், திறம்படவும் மேற்கொள்ள உதவுகிறது. கட்சி தொடங்கிய பிறகு, மாவட்டச் செயலாளர்கள் நியமனம் படிப்படியாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்டங்களாக தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகின. 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் சுமார் 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ளவை படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த 120 மாவட்ட அமைப்பு, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளை முழுமையாக உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது... கண்டிஷன் போட்ட கவுன்சிலர்..! குக்கர்ல விசில் அடிக்கலாமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருடன் இணைந்து, துணைச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், வார்டு அளவிலான பொறுப்பாளர்கள் என பல அடுக்கு நிர்வாகிகள் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள, கழக அமைப்பானது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 128 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டிருப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் கூடுதலாக்கப்பட்டு இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார்.
அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, கூடுதலாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 4 மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு எதுவாக செய்யப்பட்ட வசதிகளை குறிப்பிட்ட விஜய், புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்… வேட்பாளர் நேர்காணல் பணிகள் தீவிரம்… விஜய் முக்கிய ஆலோசனை..!