அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசியில் சுமார் ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் உரையாடினர். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதில் வேறு எந்த நாடுகளும் தலையீடு செய்யவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா தான் தலையீடு செய்து தான் மோதலை நிறுத்தியதாக கூறி வருகிறார். இதனை நம் இந்தியா ஏற்கவில்லை. இந்த நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டிரம்ப் கூறியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன்.
இதையும் படிங்க: டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு!!

இந்த உரையாடல் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. உக்ரைனால் ரஷ்யாவின் விமானம் தாக்கும் முயற்சி மற்றும் இரு தரப்பினராலும் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்கள் பற்றி விவாதித்தோம். இது ஒரு நல்ல உரையாடல், ஆனால் உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் உரையாடல் அல்ல. விமான தளங்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதிபர் புதின் மிகத் திட்டவட்டமாக கூறினார். ஈரான் அணு ஆயுதங்கள் தொடர்பான முடிவை எடுப்பதற்கு கால அவகாசம் இல்லை என்பதையும் விவாதித்தோம்.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்று நான் அதிபர் புதினிடம் தெரிவித்தேன். அதில் நாங்கள் இருவரும் உடன்பட்டதாக நம்புகிறேன். ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் தான் பங்கேற்க விரும்புவதாகவும், இந்த விஷயத்தை விரைவாக முடிவுக்கு கொண்டுவர உதவ முடியும் என்றும் புதின்கூறினார். ஈரான் இந்த முக்கியமான விஷயத்தில் முடிவெடுப்பதை தாமதப்படுத்துகிறது. எனவே கூடிய விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டிரம்புக்கு எதுக்கு நன்றி சொல்லணும்? ஜெய்சங்கர் தக் லைஃப் ரிப்ளை!!