வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. வியட்நாமின் ஃபூ குவோக் தீவு ஒரு அற்புதமான இயற்கை அழகு நிறைந்த இடம். தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள இந்தத் தீவு, வியட்நாமின் மிகப்பெரிய தீவாகக் கருதப்படுகிறது.
சுமார் 575 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இது, வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் கியென் ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தது. சமீபத்தில் இது சிறப்பு நிர்வாக மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவின் நீளம் சுமார் 50 கிலோமீட்டர் அளவில் இருக்கும். இதன் மைய நகரம் டுயோங் டாங் ஆகும். ஃபூ குவோக் தீவு “முத்துத் தீவு” (Pearl Island) என்று அழைக்கப்படுகிறது.

இதன் காரணம், வெண்மையான மணல் கடற்கரைகள், தெளிவான நீலநிறக் கடல் நீர் மற்றும் அழகிய இயற்கை அமைப்புகள்தான். தீவின் சுற்றளவில் சுமார் 150 கிலோமீட்டர் கடற்கரை உள்ளது. இங்கு அமைதியான அலைகள், பளிங்கு போன்ற தெளிவான நீர் மற்றும் பல வகையான நீர் விளையாட்டுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
இதையும் படிங்க: மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!
இந்த நிலையில், வியட்நாமில் இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சுற்றுலா படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 32 இந்தியர்கள் சிக்கி உள்ள நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 15 இந்தியர்கள் பலியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்பிற்காக இந்திய தூதரகம் அறிவிப்பு எண்களை வெளியிட்டுள்ளது. +84 36281 7930, +84 91552 3714, +84 33452 0414 ஆகிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் கோர விபத்து..!! லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 8 பேர் உடல் கருகி பலி..!!