தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தி.மு.க. கட்சி மார்ச் 28 அன்று தனது 164 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ஏற்பட்டது. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்திக்குப் பதிலாக அவரது மகன் வினோத் காந்தி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை தொகுதி தி.மு.க.வின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆர். காந்தி 1996, 2006, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் இங்கு வெற்றி பெற்று, நீண்டகாலமாக பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். அவரது அரசியல் பயணம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முறை கட்சித் தலைமை அவருக்கு சீட் வழங்காமல், இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியான வினோத் காந்தியை நிறுத்த முடிவு செய்தது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார். என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றும் இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக வினோத் காந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்... முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்வில் மாற்றம்..!!