• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திணறும் கேரள அரசு..! கைமீறும் போதைக் கலாச்சாரம்..! ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 வழக்குகள் பதிவு..!

    கேரளாவில் இளைஞர்கள் போதை மருந்து பயன்படுத்துவது அதிகரித்துள்ளது அரசுக்கு பெரிய கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pothyraj Fri, 21 Mar 2025 12:48:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    With-over-500-cases-in-every-district-Kerala’s-drug-menace

    கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதை மருந்து பயன்பாடு, போதை பயன்படுத்தும் கலாச்சாரம் மாநில அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் கட்டுப்படுப்படுத்த முடியவில்லை.

    தனிநபர்கள் போதை மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் பயன்பாடும், மனித மூளையை செயல்விடாமல் முடக்கும், மாற்றும் ரசாயன போதைப்பொருட்கள் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது மாநில அரசுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்துவரக்கூடிய இளைய சமூகம் பெரும்போதையில் சிக்கிதவிக்கும் சூழலை கேரளா எதிர்கொண்டுள்ளது.

    500 cases

    இந்த மாதத்தில் ஒரு வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், போதை மருந்து பயன்பாடு குறித்து மாநில அரசுக்கு அளித்த அறிவுரையில் “போதை மாஃபியாவின் விஷப் பற்கள் பள்ளிக் குழந்தைகள் வரை சென்றுவிட்டன. மாநிலத்தில் போதை மருந்து பயன்பாடு, கலாச்சாரம் அதிகரிப்பது கவலையளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தது. மாநில ஆளுநரும், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களை அழைத்து போதை மருந்து பயன்படுத்தும் மாணவர்களை கண்டுபிடிக்கவும், பல்கலைக்கழத்துக்குள் போதை பழக்கத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவி்ட்டார். 

    இதையும் படிங்க: சி.எஸ்.ஆர். நிதி மோசடி.. ஆயிரத்துக்கும் அதிகமான எப்.ஐ.ஆர் பதிவு - பினராயி விஜயன் தகவல்..!

    மாநிலத்தில் மாணவர்களிடையே, இளைஞர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் “லவ் ஏ தான்” என்ற பிரசாரத்தை மாநில உயர்கல்வித்துறை முன்னெடுத்தது. மாநிலத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களை போதை மருந்து புழக்கம், விற்பனை, பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். 

    500 cases

    கடந்த மாதம் கேரள சட்டப்பேரவையில் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, மாநிலத்தில் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் போதை மருந்து கலாச்சாரம், போதை மருந்து பயன்பாடு, விற்பனை ஆகியவை குறித்து காரசாரமான விவாதமும் நடந்தது.

    ஒட்டுமொத்தமாக கேரள அரசு மாநிலத்தில் மெல்ல இளைஞர்களை புற்றுநோய் போல் செல்லரித்துவரும் போதை பழக்கத்தை நினைத்து பெரும் கவலையும், அச்சத்திலும் இருக்கிறது. இதை நிலை கேரளாவில் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடித்தால், மாநிலதில் எதிர்காலத்தில் உருவாகும் இளைஞர்களில் போதைக்கு அடிமையாகாதவர்கள் சதவீதம் குறைவாகவே இருக்கக்கூடும்.

    கேரள மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை மருந்து பயன்பாடு, விற்பனை,வைத்திருத்தல், கூட்டாக அருந்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 500 வழக்குகள் என்டிபிஎஸ்(NDPS) சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன. 

    500 cases

    என்டிபிஎஸ் என்பது போதை மருந்து மற்றும் மூளை மாற்றும் ரசாயான மருந்துகள் சட்டம் 1985 ஆகும். 2017ம் ஆண்டில் கேரளாவில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 5,695 வழக்குகள்தான் பதிவாகியிருந்தன. ஆனால் 2022ம் ஆண்டில் அதாவது 5 ஆண்டுகளில் இந்த வழக்குகள் எண்ணிக்கை 26,619 ஆக அதிகரித்தது, 2023ம் ஆண்டில் 30ஆயிரம் வழக்குகளைக் கடந்தது. 2024ம் ஆண்டில் போலீஸார் விழித்துக் கொண்டதையடுத்து 27,701ஆகக் குறைந்தது.

    போதை மருந்து பயன்பாடு, ரசாயன போதை மருந்து பயன்பாடு கேரளாவில் மட்டும் கவலைக்குரியதாக மாறவில்லை, பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழகம், உத்தரப்பிரதேசத்திலும் அதிகரித்துள்ளது அந்தந்த மாநில அரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகின, அதில் பாதியளவு கேரளாவில் பதிவாகின.
     
    2023, 2024ம் ஆண்டுகளில் பல மாநிலங்களில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கை தீவீரமாகிய நிலையில், பஞ்சாப், கேரளாவில் மட்டும் அதிகரித்தது. அது மட்டுமல்லாமல், போதை மருந்து வழக்குகளும் அதிகரித்த நிலையில், மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது கேரள அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கு 78 பேர் தீவிரமான போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்தது.

    500 cases

    பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்து தொடர்பாக வழக்குகள் வீதம் அதிகரித்தாலும் விற்பனை, கடத்தல்தான அதிகரித்தது ஆனால், பயன்பாடு குறைந்ததால், ஒருலட்சம் பேருக்கு 30 பேராகத்தான் இருந்தது. சிறிய மாநிலமான மிசோரத்தில் ஒரு லட்சம் பேருக்கு 25 பேர் தீவர போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    கேரளாவில் இந்த நிலை மிகவும் மோசமாகி, 2022ம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 500 வழக்குகள் என்டிபிஎஸ் மூலம் பதிவாகின. இது எந்த மாநிலத்திலும் இல்லாத மோசமானநிலைக்கு கொண்டு சென்றது.

    2022ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் என்டிபிஎஸ்சட்டத்தின் பதிவான வழக்குகளில் 83 சதவீதம் மும்பை மாவட்டத்தில்தான் பதிவாகியிருந்தது. கர்நாடகத்தில் பதிவான வழக்குகளில் பெங்களூரு மாவட்டத்தில் மட்டும் 63%, இதற்கு நேர்மாறாக, கேரளாவில் உள்ள எந்த ஒரு மாவட்டத்திலும் மாநிலத்தின் மொத்த வழக்குகளில் 10% க்கும் அதிகமாகப் பதிவாகவில்லை.

    500 cases

    என்டிபிஎஸ் சட்டத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று போதை மருந்துகளை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வைத்திருப்பது 2வது, போதைக் கடத்தல், விற்பனைக்காக வைத்திருப்பதாகும். கேரளாவில் 94 சதவீத என்டிபிஎஸ் வழக்குகள் தன்னுடைய சுயபயன்பாட்டுக்காக வைத்திருந்ததாக இருந்தது. 2022ம் ஆண்டில் 6% வழக்குகள் மட்டுமே கடத்தல் என்ற ரீதியில் பதிவாகியிருந்தது.

    2022ம் ஆண்டில் போதை மருந்து வைத்திருந்ததாக என்டிபிஎஸ் சட்டத்தில் பதிவான வழக்குகள் கொண்ட முதல் 25 மாவட்டங்கள் பட்டியலில் 17 மாவட்டங்கள் கேரள மாநில மாவட்டங்கள்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருந்தது.

    ஆனால் போதை மருந்து கடத்தலுக்காக, விற்பனைக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கொண்ட டாப் 25 மாவட்டங்களில் கேரளா மாவட்டம் ஏதுமில்லை. ஆனால், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 4வது இடத்திலும் அங்கு 667 வழக்குகள் என்டிபிஎஸ் சட்டத்தில் பதிவாகியுள்ளன.

    500 cases

    கேரளாவில் தனிநபர்கள் போதை மருந்து பயன்படுத்துவது, வைத்திருப்பது, இளைஞர்கள் குறிப்பாக ரசாயன போதை மருந்து பயன்படுத்துவது அதிகரித்துள்ளது அரசுக்கு பெரிய கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய அரசின் என்சிஆர்பி தகவல் திரட்டில் 2017 முதல் 2022 வரையிலும் 2023 மற்றும் 2024 புள்ளிவிவரங்கள் மாநிலங்களவை அளித்த தகவலில் இருந்தும் எடுக்கப்பட்டவை.

    இதையும் படிங்க: பெண்ணுடன் நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டல்..! ஜோதிடருக்கே விபூதி அடித்த பலே கும்பல்..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share