கேரளா திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது உலகின் மிக விலை உயர்ந்த போர் விமானங்களில் ஒன்றான F-35B விமானம் தரையிறங்கி சிக்கி உள்ள சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 835 கோடி மதிப்புள்ள இந்த ஜெட் ஒரு பெரிய போர் வல்லர சக்தியான இங்கிலாந்தின் ராயல் கடற்படையருக்கு சொந்தமானது. இது தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான கடற்படை கூட்டு பயிற்சிக்காக இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் எஎம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சனிக்கிழமை இரவு மோசமான வானிலை மற்றும் எரிப்பொருள் குறைபாடு காரணமாக இந்த ஜெட் விமானம் வழக்கத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக கேரளா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. புறப்பட்டு 100 கடல் மைகல்களைக் கடந்த போதும், அது விமான தாங்கி கப்பலுக்கு திரும்ப முடியாமல் போனதால், இந்தியா இதற்கு தற்காலிக தஞ்சம் அளித்தது. இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை பாராட்ட வேண்டுமானால், இது மேக் 1.6 வரை வேகமாக பறக்கும் திறன் கொண்டது. பொதுவாக ஹெலிகாப்டரை போல செங்குத்தாக உயர்ந்து தரையிறங்கும் வல்லமை கொண்டது.

இதையும் படிங்க: #BREAKING: வரி ஏய்ப்பில் சிக்கிய JAN DE NUL.. கடல் சார் கட்டுமான நிறுவனத்தில் அதிரடி ரெய்டு!
மேலும் ரேடாரில் கண்டறிய முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜெட் முழு போர்க்கல தகவல்களை நேரடியாக விமானிக்க தரும் நவீன சென்சார் அமைப்புகளை கொண்டுள்ளது. இந்த விமானத்தில் இருந்த ராயல் கடற்படை விமானிஜெட் தரையிறங்கியதிலிருந்து ஒரு நாளுக்கு பிறகு AW101 மெர்லின் ஹெலிகாப்டரின் மூலமாக மீண்டும் விமானம் தாங்கி கப்பலுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் அந்த ஜெட் விமானம் தற்போது சுமார் 72 மணி நேரமாக விமான நிலையத்தில் சிஐஸ்எ பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் அனுமதி இல்லாமல் அந்த விமானம் புறப்பட முடியாது என்பதை குறிப்பிடுவது அவசியம். இந்த சம்பவம் ஒரு திசை திருப்பல் மட்டுமே என்றும் இந்திய விமானப்படை இந்த நிலையை நன்கு கண்காணித்து வருவதாகவும் ஒரு சிறிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அளவுக்கு சிறந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு ஜெட் விமானம் இந்திய நிலத்தில் அவசரமாக தரையிறங்கி இருப்பது பலரது கண்களில் கேள்விகளையும் ஆச்சரியத்தையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? காவலர்களை வஞ்சிக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கடும் சாடல்..!