மறைந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருப்பது போல உணவகம் ஒன்றில் அமர்ந்து சாப்பிடும் காட்சியைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் “இதுவரை பார்த்த ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்தது” என்றும், “கேப்டன் சாப்பிடும் அழகே தனிதான்” என்றும் பாராட்டி வருகின்றனர்.
பலர் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியடைந்து, “மிஸ் யூ கேப்டன்” என கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.கேப்டன் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர். திரைப்படத் துறையில் நடிகராகவும், பின்னர் அரசியல்வாதியாகவும் செயல்பட்ட அவர், எப்போதும் பசியோடு வருபவர்களுக்கு வயிறார உணவு அளிப்பதில் தனி அக்கறை காட்டினார்.

அவரது அலுவலகத்திலோ வீட்டிலோ யார் வந்தாலும் முதலில் சாப்பாடு போட்டுவிட்டுப் பேசுவது அவரது வழக்கம். அந்த மனப்பான்மைதான் அவரை “கலியுக கர்ணன்” என மக்கள் போற்றும் அளவுக்கு உயர்த்தியது. இப்போது அந்த நினைவுகளை மீண்டும் கிளறிவிடும் வகையில் இந்த ஏஐ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 400-க்கும் மேற்பட்ட படங்கள்.. பத்மஸ்ரீ முதல் நாடக மேடை வரை..!! பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் வாழ்க்கைப் பயணம்..!
வீடியோவில் கேப்டன் ஒரு சாதாரண உணவகத்தில் மேஜை அருகே அமர்ந்து, தனக்கே உரிய பாணியில் உணவை அனுபவித்துச் சாப்பிடுவது போலக் காட்டப்பட்டுள்ளது. அவரது முகபாவனைகள், கை அசைவுகள், சாப்பிடும் விதம் ஆகியவை மிகவும் இயல்பாகவும் உயிரோட்டத்துடனும் உள்ளன. ஏஐ தொழில்நுட்பம் இன்று எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவாக உணர்த்துகிறது. பலர் இதைப் பார்த்து “கேப்டன் இன்னும் நம்மிடையே இருக்கிறார் போலத் தோன்றுகிறது” என உணர்ச்சிவசப்படுகின்றனர்.
இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் லுக்..!! ‘சுந்தரி’ சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!