80ஸ் முதல் இன்று உள்ள 2கே வரை அனைவரும் பார்க்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால் அதுதான் சீரியல். எவ்வளவு தான் காலம் மாறி சென்றாலும் சீரியலுக்குண்டான மோகம் மட்டும் இன்றும் மாறவே இல்லை. தற்போது மலையாள சினிமாவில் பெண்கள் சீரியல் பார்ப்பதை வைத்தே படம் எடுக்கும் அளவிற்கு சீரியல் மோகம் அமோகமாக உள்ளது.

இப்படி இருக்க பல மெகா ஹிட் சீரியல்களை நம் வாழ்வில் நாம் கண்டிருக்க முடியும். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆறு வருடங்கள் வரை ஒளிபரப்பான சீரியல்களும் நம் கண்களுக்கு முன்பாக இருந்திருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் கோலங்கள், மெட்டிஒலி, வாணி ராணி, மை டியர் பூதம், சின்ன பாப்பா பெரிய பாப்பா என பல சீரியல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாகவே இருக்கிறது. தமிழில் உள்ள சீரியல்களில் எப்பொழுதும் மாமியார் மருமகள் சண்டை, குடும்பத்தில் சொந்த பந்தங்களால் வரும் பிரச்சனைகள், தாய்மாமன் பிரச்சனை, முறைமாமன் பிரச்சனை என பல வருடங்களாக அரைத்த மாவையே அரைத்து வந்த பொழுது அவை அனைத்தையும் மாற்றும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்..! அவர் பேசிய ஆடியோவை கேட்டு கதறி அழும் ரசிகர்கள்..!

அப்பொழுது வந்த 'உள்ளம் கொள்ளை போகுதடா' சீரியல் முதல் 'மூன்று முடிச்சு' என அனைத்து சீரியல்களும் ஹிட் கொடுக்க, மக்கள் இதுபோன்ற சீரியல்களை தான் தற்பொழுது அதிகமாக எதிர்பார்க்கின்றனர் போல என பல சேனல்களும் அந்த பேட்டனையே தற்பொழுது ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு கட்டத்தில் தற்பொழுது சீரியலில் பிரச்சனைகளை விட காதல், காமம், பிரச்சனை, துக்கம், சந்தோஷம் என அனைத்தையும் கலந்த கலவையாக காண்பித்து வருகின்றனர். ஒரு புறம் பார்த்தால் அண்ணன் தம்பிகள் கொண்ட சீரியல்களையும் மறுபக்கம் தனது தங்கைகளை கரையேற்ற போராடும் அக்கா சீரியல்கள் போலவும் இன்னொரு பகுதியில் பார்த்தால் தனது காதலனை காதலி தேர்ந்தெடுக்கும் சீரியலாகவும் பல தரப்பட்ட சீரியல்கள் இங்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் பலராலும் பல வருடங்களாக பார்க்கப்பட்டு வரும் ஒரே ஒரு சீரியல் என்றால் தற்பொழுது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" சீரியல் எனலாம். நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்வதற்கு ஏற்ப இந்த சீரியலும் நான் முடிப்பேன் என்று நினைத்தாயோ என்று இன்னும் முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த சீரியலுக்கு மக்கள் ஃபுல் ஸ்டாப் வைத்தாலும் அதனுடைய டைரக்டர் மட்டும் கமா போட்டு சீரியலை வளர்த்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்க இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேஹா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தற்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கும் இவர் இதே பாக்கியலட்சுமி சீரியலில் நடனம் ஒன்று ஆடி இருப்பார்.

அன்று முதல் இன்று வரை அவரை பலரும் அவரை உருவ கேலி செய்து வருகின்றனர். இதற்கு அவர் பலமுறை பதில்கள் கொடுத்தும் தக்க பதிலடி கொடுத்தும் அடங்காத நெட்டிசன்கள் மீண்டும் மீண்டும் அவரை கேலி கிண்டல்கள் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நடிகை நேஹா இதற்கு சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மூலமாக தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அதன்படி அவர் வெளியிட்டு உள்ள ரீல்சில் " அய்யய்யோ... இவர் மூஞ்ச பாத்தியா, இவர் மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்குல்ல. குரங்கு கடித்த கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி.. இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க... என சந்தான படத்தின் காமெடியை கணக் கச்சிதமாக ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கிறார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஒருவரை இதற்கு மேல் கலாய்த்து தண்டிக்க முடியாது என அவரது ரீல்ஸ்க்கு லைக்ஸ் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி தான் ஆட்டமே.. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்த நடிகர் சூரி..!